நீங்கள் 1,10,19,28 தேதிகளி;ல் பிறந்திருந்தால் உங்கள் எண்ணில் நாயகராக சூரியன் வருவார். உங்களை நாடிவருபவர்களை ஆதரிக்க கூடியவர் நீங்கள் தலைமை தாங்கும் எண்ணங்கள் மேலோங்கி நிற்கும். கலைரசனையும், துல்லிதமான அறிவும். பிறருக்கு போதிக்க கூடிய தன்மையும் கொடுக்கும். நீண்ட தூர பயணங்கள் வெற்றி வாய்ப்புகளை கொடுக்கும். பத்திரிக்கை தொடர்புடைய தொழில்களும், அரசியல், அரசியலை நிர்வகித்து நடத்தி செல்லகூடிய ஆற்றலும், உருவாகும். நீங்கள் எவருடன் இணைந்தாலும் உங்களின் தனித்தன்மையை இழக்கமாட்டீர்கள். எண்களிலேயே இது ராஐh,நீங்கள் விரும்பாவிட்டாலும் தலைமை பொறுப்பு உங்களை தேடிவரும். பொறுப்புகளை ஏற்றபின் அந்த பதவிக்கு வலிமையை சேர்;ப்பீர்கள். சில வேலைகளில் மற்றவர்களுடைய குறைகளை பலர்முன்பு கேட்டுவருவீர்கள். இதனால் மறைமுக எதிர்ப்புகள் உருவாகி விடும். அத்துடன் தங்களிடம் பிடிவாதங்கள் நிறைந்து காணப்படும். படிபடிப்பாக குறைந்துக் கொள்வது உங்;கள் வளர்ச்சியில் மேலும் மெருகேற்றும். உங்களுக்கு ஏற்படும் நோய்கள். சோர்வு, அதிகதூக்கம். மலச்சிக்கல், கண்நோய்கள், அஜீரணம், இருதயபலகீனம். வயிற்று பச்சிகள் நிவர்த்திக்குரியவைகள் பகல் தூக்கம். கூடாது. இரவு விழித்தல் கூடாது. எண்ணைக்குளியல் அவசியம். பழைய உணவு கூடாது நோய்நிவர்த்தி செய்து அதிர்ஷ்டத்தை தேடி தரும். நவரத்தினம் - மாணிக்கம் (Ruby) உபரெத்தினம் - சன்ஸ்டோன், (Sun Stone) டோபாஸ், (Topax) ப்ளட்ஸ்டோன் (Blood Stone) அதிர்ஷ்ட எண் - 1.4.கூட்டு எண்கள் அதிர்ஷ்ட நிறம் - வெளீர் சிவப்பு, சந்தனம், ஆரஞ்சு, நீலம் கலந்த வெள்ளை அதிர்ஷ்ட ரத்தினக்கல் - கனகபுஷ்பராகம், மாணிக்கம், ப்ளட் ஸ்டோன் அதிர்ஷ்ட திசை - கிழக்கு அதிர்ஷ்ட கிழமை - ஞாயிறு வணங்க வேண்டிய தெய்வம் - சிவன்
எண்-1 - சூரியன்
Posted in: 'அட்டமாதிபதி'
You cannot reply to topics in this forum