LUCKY PROMOTION
NETORGIN AD CONTAINER
Advertise Now!
LATEST TOPICS UPDATES

Advertising banner 250x250Advertising banner 250x250

சனிப்பெயர்ச்சி 2017 - ரிஷபம்

Posted in: 'அட்டமாதிபதி'

Astrologer••• 1
Nostradamus

Nostradamus
Nostradamus

Nostradamus

Posts : 625

Likes : 15

Join date : 2012-07-31


8/12/2017, 6:48 am

ரிஷப ராசி பலன்கள்: கார்த்திகை 2,3,4 ம் பாதங்கள், மோகினி, மிருகசீர்ஷம் 1,2 ம் பாதங்கள்.

இ, ஈ, உ, எ, ஞ, வ, வா, வி,வீ, வு, வே, வை ஆகிய எழுத்துக்களை முதலில் பெயர் எழுத்துக்களாக உள்ளவர்களும் வைகாசி மாதத்தில் பிறந்தவர்களுக்கும் இங்கு குறிப்பிட படும் பலன் கள் ஓரளவு பொருந்தும்.

வான மண்டலத்தில் உள்ள 12 ராசிகளில் 2வது ராசியாக நவகிரகங்களில் சகல சுகங்களையும் அனுபவிக்க வல்ல கிரகமான சுக்ரன் வீட்டிற்கு உரியவரான ரிஷபராசி நேயர்களே யாரையும் புன்னகை தவழும் முகத்துடன் இனிமையான குரலுடன் எதிர்கொண்டு வரவேற்பவர்கள்.

மற்ற கிரகங்களைக் காட்டிலும் அள்ளிக் கொடுக்கும் ஆற்றல் மற்றும் வல்லமை பெற்ற கிரகமாக விளங்கும் சுக்ரபகவான் உங்கள் ராசிநாதனாக உள்ளார். அவர் நல்ல படிப்பிற்கும், பேச்சுக்கும், பணப் புழக்கத்திற்கும் சகல சௌபாக்கியத்தையும் இவ்வுலகில் அனுபவிப்பதற்கு காரணமாக உள்ளார். அப்படிப்பட்ட சுக்ரபகவான் ராசியில் பிறந்த உங்களுக்கு / உங்களது ராசிக்கு இதுவரிய இதுவரை 7ம் வீட்டில் சஞ்சாரம் செய்த சனி பகவான் இனி 8ம் வீடான அஸ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பது சற்று சுமாரான பலன் தான் என்றே கூற முடியும்.

இதுவரை 7ம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனிபகவான் கண்ட சனியாக நம்மை வாட்டி வதைத்து ஒரு வழி பண்ணிவிட்டார் என்றாலும் ஒரு சில நன்மைகளும் இல்லாமல் இல்லை. இனி அவர் அஸ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் போது சற்று சுமாரான பலன் களையே அளிப்பார் என்று கூற வேண்டும்.

உங்களது ராசிக்கு 8ம் ராசியான தனுசுராசி சனிபகவான் சஞ்சாரம் செய்வது சற்று மனவருத்தங்களையும் போராட்டங்களையும் எடுத்த காரியத்தில் தடையும் உண்டு பண்ணுவார். தேவையற்ற விஷயங்களில் தலையிடக் கூடாது. எல்லாவற்றிலும் பொறுமை என்று ஒரு ஆயுதத்தை கையில் வைத்துக்கொண்டு செயல்பட வேண்டும். எதிலும் தலைமையேற்று நடத்துவதை சற்று தள்ளிப்போட்டு விட்டு, மற்றவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடத்தல் வேண்டும்.

தேவையில்லாமல் பேசுவது கூடாது. கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும். அதற்கு கடுமையாக போராட வேண்டி இருக்கும். அதே சமயம் உங்கள் ராசிக்கு 2ம் அதிபதியாக புதன் வருவதால் பணப்புழக்கம் தாரளமாக இருந்து வரும். எதிர்பாராத தனவரவு பொருள்வரவு மற்றும் மனைவி மூலம் தனவரவு ஒரு சிலருக்கு வந்து சேரும். கொடுக்கல் வாங்கலில் அதிக கவனம் தேவை. பத்திரங்கள், நகைகள் இவைகளை பத்திரமாகக் கையாளுதல் வேண்டும். உடன் பிறந்த சகோதர, சகோதரிகளால் எதிர்பாராத நன்மையும் அதே சமயம் அவர்களால் தேவையற்ற பிரச்சனைகளும் வந்து சேரும். நெருங்கிய உறவினர்களை பிரிய நேரிடும்.

பயணங்கள் அடிக்கடி அமையும். அதனால் அலைச்சல்களும் வேதனைகளும் தான் மிஞ்சும். புதிய முயற்சியில் கஷ்டப்பட்டு முன்னேற வாய்ப்பு ஏற்படும். ஒரு சிலருக்கு பழைய இடத்தை கொடுத்து புதுமனை வீடு வாங்க வாய்ப்புகள் வந்து சேரும். புதிய விஷயங்களைக் கற்பதில் போராட்டங்கள் ஏற்பட்டு இறிதியில் வெற்றி கிட்டும்.

தாயாரால் எதிர்பாராத நனமைகள் கிட்டும். தாயாரின் அன்பும் ஆதரவும் ஒரு சிலருக்கு கிடைக்கும் அதே சமயம் தாயாரின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. அடிக்கடி சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வாய்ப்பும் சந்தர்ப்பமும் அமையும் அதனால் நனமையும் விருந்து கேளிக்கைகளில் ஈடுபட மனம் விரும்பும் சுற்றுலா விருந்து விழாக்களில் கலந்து கொண்டாலும் சற்று எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும்.

குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்யம் கிட்டும். அதில் நிறைய தடைகள் ஏற்பட்டு பின் சுபகாரியம் நடக்கும். குழந்தைகளால் தேவையில்லாத பிரச்சனைகளும் அவர்களால் தேவையற்ற குழப்பங்களும் வந்து மறையும். குழந்தைகளை எச்சரிக்கையாக வளர்த்து வருதல் அவசியம். அவர்களின் செயல்பாடுகளை நன்கு கண்காணித்து வருதல் வேண்டும்.

வழக்குகள் தேவையற்ற மனச்சஞ்சலங்களை உண்டு பன்னிக் கொண்டிருக்கும். பழைய கடன்களை அடைக்க புதிய கடன்கள் வாங்க வேண்டி வரும். வட்டி பெரிய அளவில் கட்ட வேண்டி வரும். அதே சமயம் இதுவரை கொடுத்து வைத்திருந்த வராத பணங்கள் பொருள்கள் தவணை முறையில் எதிர்பாராத விதமாக வந்து சேரும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும் அரசாங்க விஷயங்களில் கவனமாக இருத்தல் வேண்டும். வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு கிடைத்த வேலையில் முதலில் சேர்ந்து கொண்டு அதன் பின் எதிர்பார்த்த வேலைக்கு முயற்சி செய்யவும் நல்ல வேலை கிடைக்கும். வேலைக்காரர்களால் பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அவர்களால் நன்மையும் உண்டாகும். உணவு பழக்க வழக்கத்தில் அதிக கட்டுப்பாடு அவசியம். நேரத்திற்கு உணவு அருந்துதல் வேண்டும்.வீட்டு வளர்ப்பு பிராணிகளால் நனமையே ஏற்படும். தாய்மாமங்களின் உறவு நன்கு அமையும்.

சுய தொழிலில் ஓரளவு லாபம் ஏற்படும். கூட்டுத்தொழிலில் கூட்டாளிகளுக்குள் தேவையற்ற மன வருத்தங்கள் ஏற்பட்டு விலகும். பாஸ்போர்ட் விசா போன்ற விஷயங்களில் தடையேற்பட்டாலும் அதனால் நன்மையேயாகும். காதல் விஷயங்கள் மகிழ்ச்சி அளிக்கும். இதுவரை நடைபெறாமல் தள்ளிப்போன சுபகாரியங்கள் சுப நிகழ்ச்சிகளில் தடையேற்பட்டாலும் இறுதியில் எல்லாம் நல்லபடியாக முடியும். எனவே எதற்கும் கவலைப்படாமல் முயற்சி என்ற ஒன்றை விடாமல் மேற்கொள்ளல் வேண்டும்.

வேலையில் போட்டி பொறாமைகள் நிறைய தடைகள் மற்றும் விருப்பமில்லாமல் இருந்தாலும் சற்று பொறுமையாக இருக்க வேண்டும். அடிக்கடி ஆலயதரிசனம், சாமி தரிசனம், பெரியவர்களை மதித்துப்போற்றி வணங்கி வர அஷ்டமசனியின் தாக்குதலிருந்து எளிதில் மீண்டு வந்து வெற்றி பெற சந்தர்ப்பம் அமையும். தந்தையாரின் உடல்நலத்தில் அதிக கவனம் தேவை. வெளியூர், வெளிநாடு செல்ல நிறைய தடைகள் ஏற்பட கூடுமாகையில் முடிந்தவரை குலதெய்வ வழிபாடு மேற்கொள்ளவும். குலத் தெய்வம் தெரியாதவர்கள் இஷ்ட தெய்வத்தை வணங்கி வர எதிர்பாராத நற்பலன்கள் ஏற்படும்.

அரசாங்க விஷயங்களில் அதிக எச்சரிக்கை தேவை. எதிலும் நிதானமாக கையாளுதல் வேண்டும். யாரை நம்புவது யாரை நம்பாமல் இருப்பது போன்ற சூழ்நிலை உருவாகும். நம்புவர்கள் துரோகம் செய்வார்கள். எந்த காரியத்திற்கும் மற்றவரை நம்பாமல் முன் கூட்டியே திட்டமிட்டு சிந்தித்து செயல்பட்டால் தோல்வியிலிருந்து விடுபட்டு வெற்றி நிச்சயம் அமையும். எதற்கும் அவசரப்படுதல் கூடாது. போக்குவரத்து வண்டி வாகனங்களில் அதிக எச்சரிக்கை தேவை. ஆபரேஷன் போன்ற விஷயங்களை நன்கு ஆராய்ந்து அதன்பின் அறுவை சிகிச்சை செய்தல் வேண்டும்.

வேலை அல்லது உத்யோகம் (Job)

உங்கள் ராசிநாதனான சுக்ரனே உங்கள் ராசிக்கு 6ம் அதிபதியாக வருவதால் வேலையில் இதுகாறும் இருந்து வந்த தடைகள் நீங்கும். எதிர்பார்த்த வேலை கிடைப்பதில் தாமதம் ஆயின் கிடைத்த வேலையில் முதலில் அமர்ந்து பின் பிடித்த வேலையை தேடுதல் வேண்டும். உங்கள் ராசிக்கு 9,10 ம் அதிபதியான சனிபகவான் உங்களது ராசிக்கு 8ம் இடத்தில் அமர்வதால் அரசாங்க வேலையில் இருப்பவர்கள் வேலையில் கவனம் தேவை. உயரதிகாரிகளால் தண்டிக்கப்பட வாய்ப்புண்டு. அதே சமயம் ஒரு சிலருக்கு விருப்ப ஓய்வு பெறவும் வாய்ப்பு அமையும் இதுவரை வராமல் தடையாக இருந்த பென்ஷன், பி.எப், கிராஜூவிட்டி போன்ற விஷயங்கள் தடையின்றி வந்து சேரும். சக ஊழியர்களின் அன்புன் ஆதரவும் கிட்டும். வேலையில் திருப்தியற்ற சூழ்நிலைக்காக அவசரப்பட்டு வேலையை விட்டுவிடுதல் கூடாது.

தொழில் (Business) வியாபாராம் (Trade)

தொழிலில் எதிர்பார்த்த லாபம் ஓரளவு வந்து சேரும். கூட்டுத்தொழிலில் கூட்டாளிகள் நன்மை அடைவர். உற்பத்தி சார்ந்த தொழிலில் தேவைக்கேற்ப உற்பத்தி செய்தல் நலம். சிறு தொழில்கள் ஓரளவு லாபகரமாக அமையும். கமிஷன், ஏஜென்ஸீஸ், புரோக்கர்ஸ், கான்ட்ராக்ட், கன்சல்டன்சி, துறைகள் ஓரளவு லாபகரமாக இருந்து வரும். பங்கு சந்தையில் அதிக கவனம் தேவை. ரேஸ், லாட்டரி, கிளப், சீட்டு இவைகளில் அதிக்க் கவனம் தேவை. தகவல் தொடர்பு எலக்ட்ரிக்கல், எலக்ட் ரானிக்ஸ், துறைகளில் லாபம் குறைந்து கொண்டே வரும். நிதி, நீதி, வங்கித்துறை, இன்சூரன்ஸ் துறைகள் நல்ல லாபகரமாக அமையும். இரும்பு, பிளாஸ்டிக், சிமெண்ட், கனிமவளங்கள் துறை நல்ல லாபகரமாக அமையும். உணவு, உடை, ஆடை, ஆபரணத்தொழில்கள் ஏற்றம் மிகுந்து காணப்படும். கப்பல், நீர், மீன்பிடித்தொழில்கள் சுமாராக இருந்து வரும். சுற்றுலா, விஞ்ஞானம், மருத்துவம், இரசாயனம் சுமாராக இருந்துவரும். . பத்திரிக்கை, தொலைக்காட்சி, சினிமா, திரையரங்கம் லாபகரமாக இருக்கும். பள்ளி, கல்லூரி, பல்கலைகழகங்கள் போன்ற துறைகள் சற்று வளர்ச்சி குன்றியே காணப்படும். சாலையோர வியாபாரம், ஏற்றுமதி, இறக்குமதி நன்கு அமையும். அழகு சாதனங்கள், திரைப்பட விநியோகம் சற்று லாபம் குறைந்து காணப்படும்.

விவசாயம்

விவசாயம் சற்று சுமாராக இருந்து வரும் கஷ்டப்பட்டு வியர்வை சிந்தி உழுது பயிர் செய்து அறுவடை செய்தாலும் லாபம் குறைந்தே காணப்படும். கனி வகைகளான வாழை, கொய்யா, மா, பலா, போன்றவற்றில் லாபம் அதிகரிக்கும். தேயிலை முந்திரி ஏலம் போன்ற பணப்பயிர்களில் லாபம் குறைந்து காணப்படும். நெல், கோதுமை, பயிறு, வகைகள் சற்று சாதகமாக இருந்து வரும். காய்கறிகளில் லாபம் குறைந்து காணப்படும். வீட்டு வளர்ப்பு பிராணிகளால் ஓரளவு லாபம் குறையும். கடன்கள் அதிக அளவு வாங்க வேண்டியது வரும். அதனால் அதிக அளவு, வட்டியும் கட்ட வேண்டி வரும். விளைச்சலுக்கேற்ற விலை கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

அரசியல்

நண்பர்கள், கூட்டாளிகள், சகாக்கள் உங்களுக்கு சாதகமாக இருப்பதாக எண்ணி ஏமாந்து விடுதல் கூடாது. யார் எப்பொழுது எப்படி மாறுவர் என்று கூற முடியாது. எனவே எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும். தேவையற்ற விஷயங்களைப் பேசுதல் கூடாது. வருமானத்தில் குறைவு இல்லையென்றாலும் அரசியல் எதிர்கள் விஷயத்தில் எச்சரிக்கை தேவை. யாரையும் நம்பி உண்மையை உரைத்தல் கூடாது. தொண்டர்களின் உண்மையான அன்பையும் ஆதரவையும் பெற தீவிரமாக பாடுபட வேண்டியிருக்கும். அரசாங்கத்தால் எதிர்பாரத துன்பங்கள் துயரங்கள் வந்து சேரும்.

கலை

உங்களது ஆசை, அபிலாஷைகள் பூர்த்தியாவதில் நிறைய தடைகள் ஏற்பட்டு விலகும். போட்டி, பொறாமை இடைஞ்சல்களை சந்திக்க வேண்டி வரும். ஆரம்பத்தில் மிகவும் கஷ்டபட்டு பின் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். வருமானம் கூடும். அதற்கேற்ப செலவினங்களும் கூடும் முழுத்திறமையும் வெளிப்படுத்தினால் மட்டுமே ஜெயிக்க முடியும். நடனம், நாட்டியம், இசை, சிற்பம், ஓவியம் சிறந்து விளங்கும். சினிமா சின்னத்திரை போட்டி மிகுந்து காணப்படும். எழுத்தாளர்கள், பாடலாசிரியர்கள், கவிஞர்கள், இசைக்கலைஞர்கள் ஏற்றம் பெறுவர்.

மாணவர்கள்

விரும்பிய பள்ளி, கல்லூரிகளில் இடம் கிடைக்க சற்று போராட வேண்டி வரும். கல்வியில் அதிக கவனம் தேவை. தேவையற்ற விஷயங்களில் மனதை செலுத்துதல் கூடாது. படிப்பில் கவனம் தேவை. படிப்பிற்காக வெளிநாடு செல்ல போராட வேண்டியது வரும். கல்விக் கடன் கிடைப்பதில் பெரிய போராட்டமே நடைபெறும். போட்டி தேர்வில் அதிக கவனம் தேவை. விளையாட்டுகளில் அதிக ஈடுபாடு ஏற்படும். அதனால் பரிசுகளும், வெற்றிகளும் பெற கடுமையாக போராட வேண்டியது வரும்.

பெண்கள்

உங்கள் ராசிக்கு 8ம் இடத்தில் சனி சஞ்சாரம் செய்வதால் தேவையில்லாமல் பேசுதல் கூடாது. அடிக்கடி அலைச்சல்களும் அதனால் உடல் சோர்வுகளும் அசதியும் ஏற்பட்டு விலகும். உடல் ஆரோக்யத்தில் அதிக கவனம் தேவை. சுபகாரியங்களில் அடிக்கடி கலந்து கொள்ள வாய்ப்பும் சந்தர்ப்பமும் அதிகரிக்கும். குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்யம் கிட்டும். இதுவரை நடைபெறாமல் தள்ளிப் போன திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடந்தேறும். காதல் விஷயங்கள் மகிழ்ச்சிகரமாகவும் சந்தோஷகரமாகவும் அமையும். கணவன் மனைவி ஒற்றுமை சற்று சுமாரகவே இருந்து வரும். கணவரின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை.

வேலையில்லாமல் வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். எப்பொழுதும் சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும். வேலையில் உத்யோக உயர்வு அமையும். நல்ல ஊதிய உயர்வுக்காக கடுமையாக போராட வேண்டி வரும். 2வது திருமணம் ஒரு சிலருக்கு அமையும். விவகாரத்து போன்ற விஷயங்கள் இழுபறியாகவே இருந்து வரும். உயரதிகாரிகள் ஒத்துழைப்பு சற்று சுமாராக இருந்து வரும். சக ஊழியர்கள் அன்பும் ஆதரவும் கிட்டும். குழந்தைகளால் ஒரு சிலருக்கு நன்மையும் அவர்களால் ஒரு சிலருக்கு தேவையற்ற மன வருத்தம் அமையும். வேலை நிமித்தமாக வெளிநாடு செல்வதில் நிறைய தடைகள் ஏற்பட்டு பின் விலகும். அடிக்கடி வெளியூர் செல்ல வாய்ப்பு அமையும். போக்குவரத்து வண்டி வாகனங்களில் எச்சரிக்கையாக சென்று வருதல் வேண்டும்.

உடல் ஆரோக்யம்

உடலில் அடிவயிறு, கால், முழங்கால், பாதம் போன்ற உறுப்புகளில் பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும். தேமல், சிரங்கு, வைரஸ் காய்ச்சல் போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டு விலகும்.

சனிபகவான் வகரம் மற்றும் வக்ர நிவர்த்தி பலன்கள்
(மூலம், பூராடம், உத்தராடம், கேட்டை)

மூலம்:

சனிபகவான் மூல நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் காலங்களில் அடிகக்டி ஆலயம் மற்றும் தெய்வ தரிசனம் மேற்கொள்ளல் வேண்டும். வேலையில் அடிக்கடி பிரச்சனைகள் ஏற்பட்டு அதன் பின் வேலை நிரந்தரமாகும். பொருளாதாரம் ஒரு பக்கம் சீராக இருந்தாலும் இன்னொரு பக்கம் கடன் வாங்கி வட்டி கட்ட நேரிடும். பிராயாணங்களில் கவனம் தேவை. பயணங்கள் அலுப்பாகவும் மகிழ்ச்சியற்றதாகவும் இருக்கும். அரசாங்க விஷயங்களில் சற்று எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருந்து வருதல் வேண்டும்.

உடல் ஆரோக்யத்தில் அதிக கவனம் தேவை. சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். உடன் பிறந்தர்களால் எதிர்பார்த்த நன்மைகளும் ஏற்படும். நெருங்கிய உறவினர்களை விட்டுப் பிரிய நேரிடும். இதுவரை நடவாமல் தள்ளிப் போன சுபகாரியங்கள் சற்று சிரம்மத்திற்குள்ளாகி இனிதே நடந்தேறும். திருமணம் சற்று தாமதமாக நடந்தேறும் திருமணமாகி வாரிசு இல்லாதவர்களுக்கு வாரிசு யோகம் ஒரு சிலருக்கு அமையும். சிலகாரியங்கள் ஆரம்பத்தில் சுபமாக தோன்றினாலும் பின் அதில் தடையேற்பட்டு தள்ளி போகும். தொழிலில் போட்டி பொறாமைகள் ஏற்படும். வேலையில் அதிக கவனம் தேவை.

ஒரு சிலருக்கு வேலையில் மாற்றமும் இடமாற்றம் அமையும். வழக்குகள் சற்று பயமுறுத்தினாலும் பெரிதாக பாதகம் ஒன்றும் வராது. விருந்து கேளிக்கைகளில் சற்று கவனமுடன் நடந்து கொள்ளல் வேண்டும். காதல் விஷயங்கள் சற்று மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் இருக்கும். தாயரின் அன்பும் ஆதரவும் நன்கு கிட்டும். உடன் பணிபுரிவர்களால் நன்மை ஏற்படும் எதிர்பாராத உதவிகளும் அதன் மூலம் எதிர்பார்த்த உங்கள் ஆசைகள் பூர்த்தியாகும் சமயம் இதுவாகும்.

பூராடம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் பொழுது

சனிபகவான் சுக்ரனுடைய நட்சத்திரமாக பூராட நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் பொழுது வேலையில்லாதவர்களுக்கு எளிதில் வேலை கிடைக்கும். அதே சமயம் அந்த வேலையில் திருப்தியற்ற சூழ்நிலைகளும் வந்து சேரும். எதிர்பார்த்த உத்யோக உயர்வில் தடைகள் ஏற்பட்டு விலகும். பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். அதே சமயம் கடனும் அதிகரித்து காணப்படும். சமூகத்தில் ஒரு பக்கம் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். பொறுப்புகளின் தன்மைகள் உங்களுக்கு நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படும். எந்த வேலையும் கால தாமதம் செய்யாமல் அன்றாடம் அந்தந்த வேலைகளை முடித்தல் வேண்டும். புதிய முயற்சிகளை தொடரும் முன் நன்கு ஆலோசித்து சிந்தித்து செயலப்டுதல் வேண்டும். எப்பொழுதும் சுறுசுறுப்புடனும் உற்சாகமாகவும் இருக்க பழகி கொள்ளுங்கள் பேச்சில் அதிக கவனம் தேவை.

அடிக்கடி தெய்வ தரிசனங்களை காணுதல் வேண்டும். தாயாரால் எதிர்பாரத நன்மைகள் ஏற்படும். சுய தொழில்கள் ஒரளவு லாபகரமாக இருக்கும். கூட்டுத் தொழிலில் கூட்டாளிகள் லாபம் அடைவர். சகோதர சகோதரிகளால் எதிர்பாராத மன வருத்தங்களும் வேதனைகளும் மிஞ்சும். நெருங்கிய உறவினர்களை விட்டுப் பிரிய நேரிடும். வழக்குகள் சுமாரக இருந்து வரும். வேலையில் திருப்தியற்ற தன்மையே நிலவும். அவசரப்பட்டு பார்க்கும் வேலையை விட்டு விடுதல் கூடாது. உயரதிகாரிகளால் எதிர்பார்த்த நன்மைகள் ஏற்படும். நேரத்திற்கு உணவு உண்ணுதல் வேண்டும். இல்லையேல் உடல் ஆரோக்யம் பாதிக்கப்படும். தாய்மாமன்களால் எதிர்பாரத நன்மைகள் ஏற்படும். காதல் விஷயங்களில் ஆரம்பத்தில் சற்று சுணக்கம் ஏற்பட்டாலும். இறுதியில் மகிழ்ச்சி நிலவும். குடும்பத்தில் புது வரவுகள் வந்து சேரும். தேவையில்லாமல் ஆடம்பரச் செலவுகள் செய்தல் கூடாது.

உத்திராட நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் பொழுது

உப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கப் பழகுதல் வேண்டும். எண்ணிய காரியங்கள் சற்று தடையேற்பட்டாலும் இறுதியில் வெற்றி நிச்சயமாகும். எதற்கும் மலைத்து போய் இல்லாமல் போராட்டமே வாழ்க்கை என்று முடிவெடுத்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம். பணப்புழக்கம் சற்று சுமாராகவே இருந்து வரும். ஒரு சிலருக்கு சுபச் செலவுகள் அதிகரித்து காணப்படும். இடம், மனை, வீடு, வண்டி வாகனங்கள் வாங்க வாய்ப்பு ஒரு சிலருக்கு அமையும். உங்களை பற்றிய விமர்சனங்கள் இக்காலங்களில் குறையும். தேவையற்ற விஷயங்களில் முயற்சிப்பதை சற்று தள்ளி போடுதல் வேண்டும். உடன் பிறந்தவர்களுக்கு வேலையில் முன்னேற்றமும், அவர்களுக்கு சுபகாரியங்களும் இனிதே நடந்தேறும். காதல் விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். காதல் கை கூடுவதில் நிறைய தடைகல ஏற்படும். கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக இருந்து வரும். சுபகாரியங்கள் இனிதே நடந்தேறும். அதே சமயம் தேவையற்ற மனவருத்தங்களும் வேதனைகளும் இருந்து கொண்டிருக்கும்.

தந்தையாரின் உடல் நலத்தில் அதிக கவனமுடன் இருத்தல் வேண்டும். வேலை இல்லாதவர்களுக்கு வேலையும் வேலை நிமித்தமாக வெளியூர், வெளிநாடு செல்லும் யோகமும் அமையும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். கொடுத்த பணம் திரும்ப கிடைப்பதில் சற்று சுணக்கம் ஏற்படும். வேலையாட்களால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும். நண்பர்களால் எதிர்பாராத உதவிகள் கிட்டும். உயர் அதிகாரிகள் விஷயத்தில் தேவையற்ற பேச்சு வார்த்தை கூடாது. பாஸ்போர்ட், விசா, வருவது சற்று காலதாமதமாகும். குடும்பத்தில் புது உறுப்பினர் வருகையால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும். உடல் ஆரோக்யத்தில் அதிக கவனம் தேவை.

கேட்டை நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் பொழுது

சனிபகவான் வக்ரம் ஆகி கேட்டை நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் பொழுது எடுக்கும் முயற்சிகள் ஆரம்பத்தில் தடையேற்பட்டாலும் இறுதியில் எதிர்பாராத வெற்றிகள் கிடைக்கும். உங்களுடைய பொறுமையும். பொறுப்பு உணர்ச்சியும் சோதிக்கப்படுகின்ற காலம். எனவே சற்று கவனமுடன் செயல்படுதல் வேண்டும். பணப்புழக்கம் சற்று சுமாராக இருந்து வரும். கொடுத்த பணம், பொருட்கள் சற்று தாமதமானாலும் வந்து சேரும். பொன், பொருள், மனை, வீடு, இடம், வண்டி வாகனங்கள் வாங்க சற்று தடையேற்பட்டாலும் இறுதியில் வந்து சேரும். எந்த வேலையில் இறங்கினாலும் தாமதம், தடை ஏற்படத்தான் செய்யும். அவைகளை கடப்பது தான் புத்திசாலிதனம். தேவையற்ற பேச்சுகளை தவிர்ப்பது நல்லது, புதிய முயற்சிகளில் இறங்கி வெற்றி பெற பாடுபட வேண்டி இருக்கும்.

உடன் பிறந்த சகோதர, சகோதரிகளுக்கு வேலை மாற்றம், திருமணம் போன்ற சுப காரியங்கள் இனிதே நடந்தேறும். புதிய தொழில்கள் தொடங்குவதற்கு முன் நன்கு ஆலோசித்தல் வேண்டும். காதல் விஷயங்கள் திருப்திகரமாக இருக்கும். கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக அமையும். குழந்தை பாக்யத்தில் சற்று தடையேற்பட்டு பின் விருப்பம் பூர்த்தியாகும். கிடைத்த வேலையை திருப்திகரமாக செய்து வரவும். வேறு வேலை மாறும் முன் நன்கு ஆலோசித்து செய்யவும். தந்தையினரால் நன்மை ஏற்படும். வெளிநாட்டு செய்திகள் சாதகமாக வந்து சேரும். அடிக்கடி வெளியூர் பயணங்கள் அமையும். அதனால் அலைச்சல்களும் வேதனைகளும் ஏற்படும். பெண்கள் தங்கள் உடல் நலனில் அதிக அக்கரை எடுத்துக் கொள்ளல் வேண்டும்.

கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு

இக்காலங்களில் எதிர்பார்த்த செய்திகள் தாமதமாக வந்தாலும் இறுதியில் சாதகமாக அமையும். எப்பொழுதும் சுறுசுறுப்பும் ஊக்கமும் உடையவர்களாக விளங்குவார்கள். சமூகத்தில் சற்று மதிப்பும் மரியாதையும் கூடும். பேச்சில் சாமர்த்தியம் அதிகரிக்கும். எதிர்பார்த்த பணவரவுகள் சற்று தாமதமானாலும் தவணை முறையில் வந்து சேரும். புதிய முயற்சிகள் எதிர்பார்த்தபடி லாபகரமாக இருந்து வரும். தேவையில்லாமல் யாருக்கும் கடன் கொடுத்தல் கூடாது. புதிய ஆடை, ஆபரணச் சேர்க்கைகள் ஒரு சிலருக்கு அமையும். தாயருக்கு இதுவரை இருந்து வந்த நோய் நொடிகள் நீங்கும் அல்லது குறையும் உடன் பிறந்தவர்களின் அன்பும் ஆதரவும் எதிர்பார்த்தபடி அமையும். வீடு, மனை, வண்டி, வாகனங்கள் வாங்க வாய்ப்புகளும் சூழ்நிலைகளும் வந்து சேரும். அலைச்சல்கள் அதிகரிக்கும், பயணங்கள் சாதகமாக இருந்து வரும். உங்களை பற்றிய வீண் வந்தந்திகள் அதிக அளவில் பரவியபடி இருக்கும். காதல் விஷயங்களில் எதிர்பார்த்த மகிழ்ச்சி சற்று குறைந்து காணப்படும். வெளி வட்டாரப் பழக்க வழக்கங்கள் அதிகரிக்கும். நெருங்கிய உறவினர்களால் தேவையற்ற மன வருத்தங்கள் ஏற்படும். குழந்தை பாக்யம் கிட்டும். சுய தொழில்கள் சற்று சுமாராக இருந்து வரும். கூட்டுத் தொழில்களில் ஏற்றுமதி இறக்குமதி லாபகரமாக இருந்து வரும். பார்க்கும் வேலையை விட்டு விடுதல் கூடாது. வேலையில் கவனம் தேவை. வேலையின் நிமித்தமாக வெளியூர், வெளிநாடு செல்ல வாய்ப்பு ஒரு சிலருக்கு அமையும். நண்பர்களால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்பட்டுப் பின் விலகும். கணவன் மனைவி உறவு சுமாராக இருந்து வரும். போக்குவரத்து வண்டி வாகனங்களில் எச்சரிக்கை தேவை. தேவையில்லாமல் கடன் வாங்குதல் கூடாது.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு

எதிர்பார்த்த காரியங்கள் ஓரளவு நடந்தேறும். எப்பொழுதும் சுறுசுறுப்பும் உற்சாகத்துடனும் இருந்து வருதல் வேண்டும். எந்தவொரு காரியத்தையும் நாளை என்று தள்ளிப் போடாமல் அன்றே செய்தல் நலம். வாழ்வில் சுகபோகங்கள் நேரத்திற்கு கிடைக்காமல் போனாலும் சற்று காலாந்தாழ்ந்து கண்டிப்பாக நடந்தேறும். உங்களது உழைப்பை உபயோகமான வழிகளில் வெளியிடுதல் வேண்டும். தேவையற்ற விஷயங்களில் தலையிடாமல் எது வாழ்க்கைக்குத் தேவையோ அதில் மட்டும் தலையிட்டு வெற்றிக்கு பாடுபட வேண்டும். கொடுக்கல் வாங்கலில் அதிக கவனம். தேவையில்லாமல் கடன் வாங்குவதோ கொடுப்பதோ கூடாது. சமூகத்தில் எதிர்பார்த்த மதிப்பும் மரியாதையும் கூடும். எல்லோரையும் அனுசரித்துப் பழகுதல் வேண்டும். அடிக்கடி கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டி வரும். அதனால் தேவையற்ற வருத்தங்களும் ஏற்படும். புதிய உறவுகள் வந்து சேரும். சகோதர சகோதரிகளுக்கு சுபகாரியம் நடந்தேறும், காதல் விஷயங்கள் மகிழ்ச்சிகரமாக அமையும். ஒரு சிலருக்கு காதல் கனிந்து திருமணத்தில் கூடும். வேலையில் சக ஊழியர்களுடன் இருந்து வந்த பிணக்கம் மறைந்து சற்று உற்சாகம் ஏற்படும். ஊதிய உயர்வும், உத்யோக உயர்வும் கிட்டும். தாய்மாமன்களால் நன்மை ஏற்படும். வழக்குகள் இழுபறியாகவே இருந்து வரும். கடன்கள் அதிகரித்து கொண்டே செல்லும். தாய், தந்தையரின் உடல் நலத்தில் கவனம் தேவை. குழந்தைகளால் எதிர்பாராத நன்மைகள் ஏற்படும்.

மிருகசீர்ஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு

இதுவரை நடை பெறாமல் தள்ளிப் போன காரியங்கள் ஓரளவு நடைபெற வாய்ப்புகள் அமையும். குடும்பத்தில் ஏற்படக்கூடிய சச்சரவுகள், தட்டுபாடுகள் கடுமையான போரட்டதிற்குப் பின் சுமூகமாக அமையும். செல்வம் செல்வாக்கு பாதிக்கப்பட்டாலும் இறுதியில் ஓரளவு நிலைமை சீராகும். தேவையற்ற பேச்சுகளைக் குறைத்து உழைப்பை உயர்த்துதல் வேண்டும். சோம்பல் உதறி சுறுசுறுப்பாக செயல்படுதல் வேண்டும். பணப்புழக்கம் ஓரளவு சுமாராக இருந்து வரும். கொடுத்த பணம், பொருள் தவணை முறையில் வந்து சேரும். தந்தையின் உடல் நலத்தில் ஆரோக்யம் ஏற்படும். உடன் பிறப்புகளால் நன்மை ஏற்படும், புதிய உறுப்பினர்கள் குடும்பத்தில் வந்து சேர்வர். அதனால் மகிழ்ச்சி உண்டாகும்.

புதிய ஆடை ஆபரணச் சேர்க்கைகள் ஒரு சிலருக்கு அமையும். வீடு, மனை, வண்டி வாகனங்கள் வாங்க வாய்ப்புகள் வந்து சேரும். அதிக அளவில் தொழிலில் முதலீடு செய்ய வேண்டி வரும். முதலாளி, தொழிலாளி உறவு சுமூகமாக இருந்து வரும். வேலையாட்களால் தேவையற்ற பிரச்சனை இருந்து வரும். சுய தொழிலில் ஒரளவு போட்டி இருந்தாலும் லாபம் கைக்கு வந்து சேரும். கணவன் மனைவி உறவு சாதகமாக இருந்து வரும். காதல் விஷயங்களில் சுவாரஸ்யங்கள் குறைந்து காணப்படும். நண்பர்களால் எதிர்பாராத நன்மை ஏற்படும். குழந்தை பேறும் அமையும். உடலில் அடிக்கடி சுகவீனம் ஏற்பட்டு வைத்தியச் செலவுகள் வந்து சேரும். நண்பர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு குறைந்து மகிழ்ச்சி கூடி வரும் காலம்.

sani peyarchi 2017 சனி பகவான் உங்கள் ராசிக்கு 8ம் இடத்தில் சஞ்சரித்து 3ம் பார்வையாக 10ம் இடத்தையும் 7ம் பார்வையாக 2ம் இடத்தையும் 10ம் பார்வையாக 5ம் இடத்தையும் பார்வையிடும் காலங்களில் ஏற்படும் பொதுப் பலன்கள்.

3ம் பார்வை பலன்கள்

சனி 3ம் பார்வையாக உங்கள் ராசிக்கு 10ம் இடத்தையும் பார்ப்பது நன்மை, தீமை கலந்த பலன்கள் 10ம் இடம் என்பது ஒருவரது தொழில் ஸ்தானம். அந்த இடத்தைப் பார்ப்பதால் இதுவரை வேலையில்லாமல் அல்லது தொழில் இல்லாமல் இருப்பவர்களுக்கு வேறு வேலை கிடைக்க வழிவகை இருப்பவர்களுக்கு வேறு வேலை கிடைக்க வழிவகை செய்வர். அதே சமயம் வேலை ஸ்தானத்தைப் பார்ப்பதால் பார்க்கும் வேலையில் இடைஞ்சல்களையும் மனசஞ்சலங்களையும், திருப்தியற்ற வேலையை தருவர். ஷை இரண்டும் ஒரே சமயத்தில் நடைபெற வய்ப்புள்ளது. 10ம் இடம் என்பது அரசு, புகழ் மற்றும் கௌரவம் அந்தஸ்து இவற்றை கொடுத்து அதில் ஒரு சிறு குறையையும் கொடுத்து புகழை குறையச் செய்வர்.

7ம் பார்வை பலன்கள்

7ம் பார்வையாக உங்கள் ராசிக்கு 2ம் இடத்தை பார்ப்பது ஒரு பக்கம் விசேஷம் என்று தான் சொல்ல வேண்டும். 7ம் பார்வையாக உங்கள் 2ம் இடமான தன ஸ்தானத்தையும் பார்ப்பது குடும்ப ஸ்தானத்தையும் பார்ப்பது உங்களுக்கு எதிர்பாரவிதமாக தனவரவு, பொருள் வரவு ஏற்பட வாய்ப்பு அமையும். முன்னோர் சொத்துகள் கணவன் அல்லது மனைவி மூலம் சொத்துக்கள் அல்லது பண வரவு அமைய வாய்ப்புகள் அமையும். அதே சமயம் தேவையில்லாத விஷயங்களைப் பற்றி பேசவோ விவாதிக்கவோ கூடாது. கொடுத்த பணம், நகை, பொருள்கள் வீடு வந்து சேரும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். பேச்சில் நிதானம் தேவை.

உழைப்பு கேற்ற ஊதியம், லாபமும் கிட்டும். கொடுக்கல் வாங்கல் சீராக இருந்து வரும். பணப் புழக்கம் சரளமாக இருந்து வரும். தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

10ம் பார்வை பலன்கள்

சனி பகவான் 10ம் பார்வையாக உங்கள் ராசிக்கு 5ம் இடத்தை பார்ப்பதால் சுபகாரியங்கள் இனிதே நடந்தேறும் 5ம் இடம் சுபகாரியங்களையும் சுப நிகழ்ச்சிகளையும் குறிப்பிடுவதுவாகும். அதே சமயம் குழந்தை பாக்யத்தில் சற்று தடையேற்பட்டு குழந்தை பாக்யம் அமையும். அடிக்கடி விருந்து கேளிக்கைகளில் ஈடுபட வேண்டியது வரும். உல்லாச பயணங்களில் சற்று பிரச்சனை ஏற்பட்டாலும் மகிழ்ச்சிகரமானப் பயணங்களாக அமையும். பார்க்கும் வேலையை விட வேண்டி வரும் கொடுத்த பணங்களை திரும்பி வாங்குவது அவ்வளவு எளிதல்ல, பணம், பொருள்கள், கண் முன் பறி போக வாய்ப்பு ஏற்படும். குடும்பத்தில் புது வரவுகள் ஏற்படும். மனம் மகிழ்ச்சிகரமாக இருக்கும் நண்பர்களால் எதிர்பாராத உதவிகள் கிட்டும். காதல் விஷயங்களில் ஆரம்பத்தில் பிரச்சனை ஏற்பட்டாலும் இறுதியில் அது சுமுகமாகவே அமையும்.

- அபிராமி சேகர்.
You cannot reply to topics in this forum